கொரோனா டைம் - உங்கள் வீட்டு வேலைக்கு பணி ஆட்கள் வந்தால் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு

பிரியா ஒரு அழைப்பிற்குத் தயாராகும் போது, அவரது குறுநடை போடும் குழந்தை மடிக்கணினியை இழுப்பதில் மும்முரமாக உள்ளது. அட கடவுளே! எல்லா வேலைகளையும் செய்ய கடினமான நேரம் இது. ஏனென்றால் கொரோனாவால் ஏற்பட்ட இந்த சவாலான நாட்களில் வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் அதாவது குழந்தை பராமரிப்பு, சுத்தம் செய்வது, சமையல் என்று வரும்போது, பிரியாவிற்கு இது ஒரு சவாலாகவே இருக்கிறது. ஆனால் எந்த வேலையையும் விட்டுவிடவில்லை. வீட்டுப்பாடம் மற்றும் வீட்டிலிருந்து ஆஃபீஸ் வேலை செய்துகொண்டே இடையில் ஒரு கண் சிமிட்டலுடன் அவளுடைய நாள் கடந்து செல்கிறது.
அவளுக்கு மட்டும் இல்லை இந்த பிரச்சினை. இது கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் நடக்கிறது. எல்லாவற்றையும் செய்து முடிக்க நாம் போராடுகிறோம். இது கொரோனா காலத்தின் உண்மை.
ஊரடங்கு பல தளர்வுகளுடன் இருப்பினும், இனிமேல் பொருளாதார நடவடிக்கைகளை செயல்படுத்த தேவையான வாழ்க்கைமுறை இயல்பானதாக இல்லை, ஆனால் சில நடவடிக்கைகள் மெதுவாக மீண்டும் செயல்படத் தொடங்குவது சற்று ஆறுதலை தருகிறது.
நிர்வாகம் மற்றும் ஆர்.டபிள்யு.ஏ ஆகியவற்றின் அறிவிப்புகள் சுற்றுகளை உருவாக்கி வருகின்றன, மேலும் பணிப்பெண்களை வீடுகளுக்குள் அனுமதிக்கலாம் என்பது முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கிறது.
இது குறித்து முரண்பாடான கருத்துக்கள் உள்ளன என்று சொல்லத் தேவையில்லை. சிலர் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப விரும்பினாலும், கோவிட் -19 பாதிக்கப்பட்ட எண்ணிக்கையில் அன்றாட உயர்வை கருத்தில் கொண்டு, பணிப்பெண்கள் தங்கள் வீட்டிற்குள் நுழைவதற்கு இது சரியான நேரம் அல்ல என்று பலர் கருதுகின்றனர்.
ஒரு குறுநடை போடும் குழந்தையின் அம்மா மீனா கூறுகிறார், “நாங்கள் இன்னும் 2 வாரங்கள் காத்திருக்க முடிவு செய்துள்ளோம். இந்த இடத்தில் பணிப்பெண்ணை அழைப்பது மிகவும் ஆபத்தானது. அதன்பிறகு நாங்கள் அழைப்போம். ”
வெளியில் இருந்து வரும் எவருக்கும் தங்கள் வீட்டிலும் குடும்பத்திலும் உள்ளே வருவதற்கு அனுமதி இல்லை என்று மீரா சொல்கிறார்.
அடையாரில் வசிக்கும் நளினி கூறுகிறார், “இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது எங்களுக்குத் தெரியாது. நாம் நம் வாழ்க்கையை தொடர வேண்டும். இது தினமும் கடினமாகவும்,சிரமமாகவும் இருக்கிறது. நான் என் கணவர் மற்றும் எனது 2 குழந்தைகளுடன் வசிக்கிறேன், நாங்கள் எங்கள் வீட்டு பணிப் பெண்ணை வீட்டிற்கு அழைத்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க முடிவு செய்துள்ளோம். ”
இவ்வளவு நாட்கள் கடுமையான நடவடிக்கைகளுக்குப் பிறகு சுத்தம் செய்தல், துடைத்தல், துவைத்தல் மற்றும் கழுவுதல் போன்ற வேலை பலவற்றிற்குப் உடனடியாக பணிப்பெண் உதவியைக் கேட்க பல காரணங்கள் உள்ளன. அதே நேரத்தில் சமூக தொலைவு எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் பார்க்க வேண்டும், மேலும் இந்த வைரஸின் பரவலைத் தடுக்கும் ஒரே வழி சமூக இடைவெளியை கடைபிடிப்பது தான். உங்கள் பணிப்பெண்ணை நீங்கள் அனுமதிக்கிறீர்களா இல்லையா என்பது முற்றிலும் தனிப்பட்ட தேர்வாகும், ஆனால் நீங்கள் அவ்வாறு அனுமதிக்கிறீர்கள் என்றால் உங்கள் வீட்டு பணிப்பெண்ணை மீண்டும் தொடங்குவதற்கு முன் இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றவேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்:
வீட்டில் பணிப்பெண்களை அனுமதிப்பதற்கு முன் நீங்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பற்றி பார்ப்போம்.
- முகமூடி அணிவது அவர்களுக்கு கட்டாயமாக ஆக்குங்கள். ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு ஒரு சுத்தமான மாஸ்க் ஒன்றை வழங்கவும்.
- உங்கள் வாசலில் ஒரு கிருமி நாசினியை (சானிடைசர்) வைத்திருங்கள். பணிப்பெண் உங்கள் வீட்டிற்குள் நுழையும் போதும் வெளியேறும் போதும் அவர்கள் கைகளை கிருமி நாசினியை கொண்டு சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும். இது உங்கள் குடும்பத்தையும் அடுத்த வருகை தரும் குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்கும்.
- உங்கள் வீட்டு பணி பெண்ணிற்கு 2 ஜோடி துணிகளை வைத்திருங்கள், இதனால் அவர் உங்கள் இடத்தில் வேலைக்கு வரும்போதெல்லாம் அந்த துணிகளை மாற்றிக் கொள்ளலாம்.
- வீட்டிற்கு வெளியே செருப்புகளை அகற்றும்படி அவளிடம் சொல்லுங்கள். உட்புற வேலைக்கு நீங்கள் அவளுக்கு ஒரு ஜோடி செருப்புகளை வழங்கலாம்.
- சமைப்பதற்கு முன்பும் பின்பும் கைகளை கழுவ வேண்டும் என்ற விதியை கட்டாயப்படுத்துங்கள்.
- சமையல் மற்றும் சுத்தம் செய்வதற்காக உங்கள் வீட்டின் பணிப்பெண் உதவியுடன் நீங்கள் மீண்டும் வேலையை தொடங்குகிறீர்கள், என்றால் 2 நாட்களுக்கு ஒரு முறை அவர்களை வேலைக்கு அழைக்கலாம். அதேபோல், வாரத்திற்கு இரண்டு முறை மூன்று முறை வீட்டை துடைத்து சுத்தம் செய்யலாம்.
- முழுமையான தனிப்பட்ட சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை உங்கள் வீட்டு பணிப்பெண்ணுக்கு சொல்லிக்கொடுங்கள்.
- பணிப்பெண் குழந்தைகள் மற்றும் பெரியவர்களைக் கையாளப் போகிறார்களானால் கூடுதல் கவனிப்பு தேவை. குறைந்தது 3 அடி பாதுகாப்பான தூரத்தை பராமரிப்பது மிக முக்கியம்.
- உங்கள் வீட்டின் பணிப்பெண் உடல்நிலை குறித்து ஒரு சோதனை வைத்திருங்கள். சளி மற்றும் இருமல் அறிகுறிகளை கவனிக்கவும். உங்கள் வீட்டின் நுழைவாயிலிலோ அல்லது வளாகத்திலோ வெப்பநிலை (ஸ்கிரீனிங்) சோதனையை நீங்கள் செய்யலாம்.
- கொரோனாவைப் பற்றிய விழிப்புணர்வை அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள், இதனால் அவர்கள் தங்களை பாதுகாப்பாக தற்காத்துக் கொள்ள முடியும்.
- சமைக்க மட்டும் வேலை செய்ய வரும் பெண்ணின் நடமாட்டத்தை சமையலறைக்குள் மட்டும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
- உங்கள் வீட்டு பணிப்பெண் வெளியேறியதும் கதவுகள், கைப்பிடிகள், போன்றவற்றை கிருமி நாசினி கொண்டு துடையுங்கள்.
இதன் மூலம் உங்கள் வேலைப்பளுவை குறைத்து கொள்ள உதவுவதோடு உங்களுக்காக சில நேரம் ரிலாக்ஸ் செய்ய முடியும். உங்களுக்கும் மற்றவர்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்யும் சில நடைமுறை குறிப்புகளை பார்த்தோம். இவைகளை பின்பற்றி கொரோனாவை வரும் முன் தடுப்பதே சிறந்ததாகும்
Be the first to support
Be the first to share
Comment (0)
Related Blogs & Vlogs
No related events found.
Loading more...