குழந்தைகள் அடிக்கடி சோர்வாகிறார்களா? குடற்புழுக்களின் அறிகுறிகள் மற்றும் தீர்வு

All age groups

Radha Shri

2.6M பார்வை

3 years ago

குழந்தைகள் அடிக்கடி சோர்வாகிறார்களா? குடற்புழுக்களின் அறிகுறிகள் மற்றும் தீர்வு
நோய் மேலாண்மை மற்றும் சுய பாதுகாப்பு
பள்ளி
நோய் எதிர்ப்பு சக்தி

தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் தேசிய குடற்புழு நீக்க முகாம்கள் மூலம் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது. இந்த மாதம் 14 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் வழங்கப்பட உள்ளது.  மேற்கண்ட நாட்களில் விடுபட்ட அனைத்து குழந்தைக ளுக்கும் 21.03. 2022 அன்று குடற்புழு  நீக்கமாத்திரைகள் வழங்கப்படவுள்ளது. 

Advertisement - Continue Reading Below

நாடு முழுக்க குடற்புழு நீக்கம் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிற அளவுக்கு  இது ஒரு முக்கிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. இப்பதிவில்

  • குடற்புழு என்றால் என்ன?  
  • குடல் புழுக்கள் - அறிகுறிகள், காரணங்கள்
  • குழந்தைகள் எவ்வாறு புழுக்களால் பாதிக்கப்படுகிறார்கள்?
  • புழு தொற்று பரவாமல் தடுப்பது எப்படி?
  • புழுக்களுடன் தொடர்புடைய உடல் நலப் பிரச்சனைகள் என்ன? குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கம் ஏன் முக்கியம்?
  • மற்றும் தடுப்பு சிகிச்சை பற்றி  தெரிந்து கொள்ளுங்கள்

குடல் புழுக்கள் என்றால் என்ன?

குடல் புழுக்கள் மனித குடலில் வாழும் ஒட்டுண்ணிகள் மற்றும் ஒரு பாலர் குழந்தை உட்கொள்ளும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களை உட்கொள்கின்றன. இதில் பாதிக்கும் மூன்று முக்கிய வகை STH வகைகள் உள்ளன, வட்டப்புழு (Ascaris lumbricoides), சவுக்கைப்புழு (Trichuris trichiura) மற்றும் கொக்கிப்புழுக்கள் (Necator americanus மற்றும் Ancylostoma duodenale). இந்த புழுக்கள் குழந்தைகளின் உணவை சார்ந்து உள்ளது மற்றும் அங்கு இருக்கும் போது, அவை தினமும் ஆயிரக்கணக்கான முட்டைகளை இடுகின்றன. புழுக்கள் மனித உடலில் இருந்து தேவையான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி,  இரத்த சோகை, உடல் பலவின்னம் மற்றும் ஆரோக்கியமான வளர்ச்சியை பாதிக்கின்றது.

குடல் புழுக்கள் அல்லது மண்ணில் பரவும் ஹெல்மின்த்ஸ் (soil-transmitted helminths- STH) காரணங்கள்

திறந்த வெளியில் மலம் கழிக்கும் நோய்வாய்ப்பட்டவர்கள் தங்கள் மலத்தில் புழு முட்டைகளை பரப்புகின்றனர். பின்னர், முட்டைகள் மண்ணை மாசுபடுத்துகின்றன, இது உணவையும் தண்ணீரையும் மேலும் மாசுபடுத்தி, தொற்றுநோயைப் பரப்புகிறது.

குடல் புழு நோய்த்தொற்று பெரும்பாலும் காய்கறிகள் வழியாக வருகிறது, அதாவது அவை சரியாக கழுவாமல் சமைக்கும் போது, அசுத்தமான நீர், மற்றும் வெளிப்புற நடவடிக்கைகள் - மண்ணில் விளையாடும் குழந்தைகள் பின்னர் கைகளை கழுவாமல் வாயில் வைப்பது போன்ற காரணங்கள்.

குடல் புழு நோய்த்தொற்றின் அறிகுறிகள்

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவருக்கும் உடலில் புழுக்கள் இருக்கலாம். இது நீண்ட காலத்திற்கு கண்டுபிடிக்க முடியாமலும் போகலாம்.  ஆனால் குடல் புழு நோய்த்தொற்றின் பொதுவான அறிகுறிகளில் பல விவரிக்க முடியாதது, சில அறிகுறிகள் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

எடை குறைவது, சோர்வு, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் அடிக்கடி வயிற்றுப் பிரச்சனைகள் ஆகியவை அடங்கும். மேலும், கடுமையான நோய்த்தொற்றுகள் இருந்தால் குழந்தைகளை மிகவும் கடுமையாக நோய்வாய்ப்படுகிறார்கள். அதாவது பள்ளியில் கவனம் செலுத்தவோ அல்லது பள்ளிக்குச் செல்லவோ சோர்வாக உணர்வது. சிகிச்சையளிக்கப்படாவிட்டால் அல்லது கண்டறியப்படாவிட்டால், புழுக்கள் குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியில் நீண்ட கால விளைவை ஏற்படுத்தும்.

புழுக்களுடன் தொடர்புடைய உடல் நலப் பிரச்சனைகள் என்ன?

இரத்தம் உட்பட திசுக்களில் புழுக்கள் வேட்டையாடுவதால், அது உடலின் இரும்புச்சத்து மற்றும் புரதத்தை இழக்க செய்கிறது, இரத்த சோகைக்கு வழிவகுக்கும். ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தும்

  •  உடலில் குறைந்த ஹீமோகுளோபின் (Hb) கிடைப்பதால் ஆக்ஸிஜனை சுமந்து செல்லும் திறன் குறைகிறது.
  • புழு தொற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். பசியிழப்பு,  குறைவாக ஊட்டச்சத்து உட்கொள்வது மற்றும்  உடல் தகுதி மாற்றம்.
  • புழு தொற்றுகள் ஒரு குழந்தையின் ஆரோக்கியம், ஊட்டச்சத்து மற்றும் கல்வி ஆகியவற்றில் இடையூறுகள் விளைவிக்கின்றது.
  • மன மற்றும் உடல் வளர்ச்சியில் எதிர்மறையான விளைவுகள் மற்றும் எடை குறைவாகவும், வளர்ச்சி குன்றியவர்களாகவும் இருக்கும் அளவுக்கு தாக்கம் இருக்கும்.
  • கடுமையான நோய்த்தொற்றுகளுடன் இருந்தால், பள்ளியில் கவனம் செலுத்தவோ அல்லது பள்ளிக்குச் செல்லவோ சோர்வாக இருக்கும்.

புழுக்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டால் குழந்தையிடம் தெரியும் வளர்ச்சி

Advertisement - Continue Reading Below
  • வேகமாகவும், ஆரோக்கியமாகவும் வளர்ச்சி இருக்கும்
  • மற்ற நோய்த்தொற்றுகளுக்கு அதிக எதிர்ப்புத் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்
  • சிறப்பாக கற்றுக்கொள்வதுடன், பள்ளியில் சுறுசுறுப்பாகவும் இருப்பார்
  • அடிக்கடி நோய்தொற்றுக்கு ஆளாக மாட்டார்கள். விடுமுறையும் குறைவாக எடுப்பார்கள்.

புழு தொற்று பரவாமல் தடுப்பது எப்படி?

புழு தொற்று பரவாமல் தடுக்க பல வழிகள் உள்ளன

சுகாதாரத்தை மேம்படுத்துதல், உட்பட:

  • கைகளை கழுவுதல், குறிப்பாக சாப்பிடுவதற்கு முன்பு மற்றும் கழிப்பறைகளைப் பயன்படுத்திய பிறகும்
  • சுகாதாரமான கழிப்பறைகளைப் பயன்படுத்துதல்
  • செருப்பு அணிதல்
  • பாதுகாப்பான மற்றும் சுத்தமான நீர் அருந்துதல்
  • சரியாக சமைத்த உணவை உண்ணுதல்
  • பாதுகாப்பான மற்றும் சுத்தமான தண்ணீரில் காய்கறிகள், பழங்களை கழுவுதல்
  • நகங்களை சுத்தமாக வைத்திருத்தல்

எல்லா குழந்தைகளுக்கும் ஏன் சிகிச்சை அளிக்க வேண்டும்?

புழுக்களின் விளைவுகள் உடனடியாக காணப்படாமல் இருக்கலாம், ஆனால் அவை குழந்தைகளின் ஆரோக்கியம், கல்வி மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் நீண்டகால தீங்கு விளைவிக்கும். குழந்தைகளின் குடலில் நீண்ட நாட்கள் புழுக்களால் இருக்க முடியும் மற்றும் அவர்களுக்கு ஏன் உடம்பு சரியில்லை என்று நமக்கு தெரியாது; அவர்கள் பள்ளியில் மோசமாகப் படிக்கிறார்கள் மற்றும் நன்றாக வளரவில்லை என்ற அறிகுறிகள் இந்தப் பிரச்சனையை துல்லியமாக கணிக்க உதவாது.

ஒரு குழந்தைக்கு தொற்று ஏற்பட்டாலும் இல்லாவிட்டாலும் மருந்துகள் பாதுகாப்பாக இருப்பதால், நோயறிதலுக்கான வழியும் சவாலாக இருப்பதால்   ஒவ்வொரு குழந்தைக்கும் சிகிச்சையளிப்பது நல்லது.

குழந்தைகளுக்கு என்ன சிகிச்சை கொடுக்கப்படுகிறது?

அல்பெண்டசோல்(Albendazole) என்பது இந்திய அரசாங்கத்தால் பயன்படுத்தப்படும் குடற்புழு நீக்க மருந்தின் பெயர் மற்றும் குடல் புழுக்களுக்கு உலகெங்கிலும் பயன்படுத்தப்படும் பாதுகாப்பான சிகிச்சையாகும். 2 முதல் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 1 மாத்திரை (400 மி.கி.) பரிந்துரைக்கப்படுகிறது. 1 மற்றும் 2 வயது அரை மாத்திரை (200 மி.கி.)

சிறு குழந்தைகளுக்கு மாத்திரைகளை உடைத்து நசுக்கி பின்னர் தண்ணீரில் கொடுக்க வேண்டும்.

குடற்புழு நீக்க சிகிச்சைக்கு பக்க உள்ளதா விளைவுகள்?

குடற்புழு நீக்க சிகிச்சையானது குழந்தைகளுக்கு மிகவும் குறைவான பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. தலைச்சுற்றல், குமட்டல், தலைவலி மற்றும் வாந்தி போன்ற சில லேசான பக்கவிளைவுகள் இருக்கலாம், இவை அனைத்தும் குழந்தையின் உடலில் புழுக்கள் கட்டுப்படுத்தப்படுவதால் இருக்கலாம்.

சிறிது நேரம் கழித்து அவை அனைத்தும் மறைந்துவிடும். பக்க விளைவுகள் பொதுவாக அதிக தொற்று உள்ள குழந்தைகளே இந்த மாதிரி விளைவுகள் அதிகம் காணப்படுகின்றது. 24 மணிநேரத்திற்குள் அறிகுறிகள் நீங்கவில்லை என்றால் மருத்துவர் அல்லது அருகிலுள்ள சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்

குழந்தைகளுக்கு எப்போது கொடுக்க வேண்டும்?

குடற்புழு நீக்க மாத்திரையை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது.

இந்தப் பதிவு உங்களுக்கு உதவும் என நம்புகிறேன். உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுடைய ஒவ்வொரு கருத்தும் எங்களுடைய அடுத்த பதிவை சிறப்பானதாக மாற்றும். உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

மேலும் குழந்தைகளுக்கு வயிற்றுப்பூச்சி ஏன் வருகிறது ? அறிகுறிகள் மற்றும் வீட்டு வைத்தியம் - https://www.parentune.com/parent-blog/why-do-babies-stomach-worm-symptoms-and-home-remedies/6863

Be the first to support

Be the first to share

support-icon
Support
share-icon
Share

Comment (0)

share-icon

Related Blogs & Vlogs

No related events found.

Loading more...